தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் என காட்டப்பட்ட உடலை புதைக்க அரசாங்கம் முடிவு!!

நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் என காட்டப்பட்ட உடலை புதைக்க அரசாங்கம் முடிவு!!

Written By paadumeen on Wednesday, May 20, 2009 | 5:37 PM

தலைவர் பிரபாகரன் என அரசாங்கத்தால் காட்டப்பட்ட உடலை நந்திக்கடல் பகுதியிலேயே ஏனைய புலிகளி்ன் உடல்களோடு சேர்த்து புதைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தி லேயே உடல் புதைக்கப்படவுள்ளதாகவும் அவரது உடலை தனியாகப் புதைக்காமல் அங்கு கிடைத்த ஏனைய உடல்களோடு சேர்த்து புதைக்கவுள்ளதாக வும் அரசாங்கத் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்த உடலை பிரபாகரன் உறவினர்கள் யாருமே இதுவரை சொந்தம் கொண்டாடவில்லை. இதுபோன்ற மிக முக்கியமான தலைவரின் உடலை அவசர அவசரமாக புதைக்க வேண்டியதன் காரணம் என்னவென்பதும் மர்மமா கவே உள்ளது. பிரபாகரன் என சொல்லப்படும் இந்த உடலைப் பார்க்கக் கூட வேறு சர்வதேச ஊடகங்களோ நடுநிலையாளர்களோ இதுவரை அனுமதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உடல் புதைக்கப்பட்ட இடத்துக் கென்று தனியான அடையாளம் எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி கூட்டாக புதைக்கவுள்ளதாக படையினரை மேற்கோள்காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment