Monday, February 20, 2012
குருநகர் சவச்சாலைச் சந்தியில் அமைந்துள்ள அரச பொது வைத்தியசாலையில் நோயாளர் களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் ணொருவர் அங்குள்ள வசதியீனங்கள் காரண மாக உயிராபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது. அப்பெண் ணுக்கு அதிகாலையில் பிரசவம் நடந்த போதி லும் பலமணி நேரமாகியிம் நஞ்சுக் கொடி அகல வில்லை. அங்கே இரவு நேரங்களில் வைத்தியர் கடைமையிலிருப்பதில்லை. தாதியர்களே பிரசவத்தைப் பார்க்கின்றனர். எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தநிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக வைத்தியருக்கும் அம்புலன்சுக்கும் அறிவித்தபோதும் அப்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. எனவே தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல முற்பட்ட போது நோயாளியை தூக்கிச் செல்வதற்குரிய ‘ஸ்ரெச்சர்’ வைத்தியசாலையில் இல்லை. எனவே பிரசவ வேதனையுடன் அப்பெண்ணைச் சிரமத்தின் மத்தியில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மக்கள் செறிந்து வாழும் சூழலில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் அடிப்படை வசதிகளையும் உபகரணக் குறைபாடுகளையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்தநிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக வைத்தியருக்கும் அம்புலன்சுக்கும் அறிவித்தபோதும் அப்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. எனவே தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல முற்பட்ட போது நோயாளியை தூக்கிச் செல்வதற்குரிய ‘ஸ்ரெச்சர்’ வைத்தியசாலையில் இல்லை. எனவே பிரசவ வேதனையுடன் அப்பெண்ணைச் சிரமத்தின் மத்தியில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மக்கள் செறிந்து வாழும் சூழலில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் அடிப்படை வசதிகளையும் உபகரணக் குறைபாடுகளையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.