
மண்ணெண்ணெய் மானிய திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூர்த்தி ஆணையாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி 25 மாவட்டங்களைச் சேர்ந்த 330 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்தத் திட்டம் ஆரம்பிக் கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வசதிகளற்ற அனைத்து குடும்பங்களுக்கும் மாதாந் தம் 200 பெறுமதியான மண்ணெண்ணெய் மானி யத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதற்கமைய மலையக மக்கள் உள்ளிட்ட சுமார் 5 இலட்சம் பேருக்கு இந்த மானியம் கிடைக்கும் என தெரவிக்கப்படுகின்றது. மண்ணெண்ணெய் மானி யத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மாதாந்தம் சுமார் 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை ஒதுக் கீடுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரி வித்துள்ளது.
0 comments:
Post a Comment