தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மீள்குடியமர்வுக் கொடுப்பனவு இல்லை! 5,739 குடும்பங்கள் பாதிப்பு!

மீள்குடியமர்வுக் கொடுப்பனவு இல்லை! 5,739 குடும்பங்கள் பாதிப்பு!

Written By paadumeen on Monday, February 20, 2012 | 12:09 PM

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவில் மீளக் குடியமர்ந்த 5ஆயிரத்து 739  குடும்பங்களுக்கு இதுவரை மீளக்குடியமர் வுக்கான கொடுப்பனவான 20 ஆயிரம் ரூபா இதுவரை வழங்கப்படவில்லையெனத் தெரி விக்கப்படுகிறது.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்திற்குட்பட்ட 42 கிராம சேவகர் பிரிவுகளில் 21ஆயிரத்து 793 குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ளன. இவ்வாறு 20 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு தினமும் அலைந்து திரிகின்றன. ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. எனவே உரிய அதிகாரிகள் இதனைப் பெற்றுத் தரவேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment