தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » விலை கூட்டி விற்றால் நடவடிக்கை!

விலை கூட்டி விற்றால் நடவடிக்கை!

Written By paadumeen on Monday, February 20, 2012 | 11:41 AM

எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலை யில் அத்தியாவசிய பொருட்களின் விலை களை உரிய விலையில் விற்பனை செய்யாது அதிகப் படியான விலைகளில் விற்பனை செய்யும் வர்த் தகர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள் ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு அலு வல்கள் அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை நிர்ணயிக்கப் பட்ட விலைகளுக்கு ஏற்ப விற்பனை செய்யாது மேல திக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் நாடு பூராகவும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பொருட்களை உரிய விலையில் விற்பனை செய்யாது அதிகப் படியான விலை களில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தாம் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள் ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment