தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Showing posts with label BREAKING NEWS. Show all posts
Showing posts with label BREAKING NEWS. Show all posts

போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு பாதுகாப்பு

Written By paadumeen on Monday, February 13, 2012 | 9:12 AM

Monday, February 13, 2012

இன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபடும் தனி யார் பஸ்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணிகள் போக்குவரத்து சேவைகள் இடம்பெறா மல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப் பிட்டார். பணி பகிஷ்கரிப்பு தொடர்பில் தமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலி ஸ் ஊடகப் பேச்சாளர், இதனால் பொலிஸாருக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாதென கூறினார். அத்துடன், பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலி ஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன், போக்கு வரத்தில் ஈடுபடும் அனைத்து பஸ்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Read More | comments

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டுமாம்.

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைக்கு அமைய, பேக்கரி உற்பத்தி களின் விலைகளை அதிகரித்தல் கட் டாயமானது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறி ப்பிடுகின்றது. இந்த விடயம் தொடர் பில் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூடி, அடுத்த வாரமளவில் தீர்மான மொன்றை பெற்றுக்கொள்ள உள்ள தாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்த ன தெரிவித்துள்ளார்.டீசலின் விலை அதிகரிக்கப்பட்டமை பேக்கரி உற் பத்தியாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையிலுள்ள 75 வீதமான பேக்கரிகள் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயுவில் இயங்குபவை எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையா ளர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார். இதன் காரணமாக பேக்கரி உற் பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் கூட்டுறவு மற் றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேனவிடம் வினவிய போது, எதிர்காலத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
Read More | comments

நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை - பிரபு தேவா பதில்


ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்த பிரபு தேவா விடம் நயன்தாரா பற்றி கேள்வி எழுப் பினர் நிருபர்கள். 'அதைப் பற்றி பேச விரும்பவில்லை' என்று பதிலளித்தார் பிரபு தேவா.

பிரபல நடிகரும் டான்ஸ் மாஸ்டரு மான பிரபுதேவா நேற்று ஆந்திர மா நிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவ ன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு தே வஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக் கப் பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் ராகு-கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜையில் கலந் து கொண்டு சுமார் 1 மணி நேரம் பூஜை செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தீஸ் வரர் மற்றும் ஞானபூங்கோதை அம் மையாரை தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் அவருக்கு கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் தீர்த்தப்பிரசாதங்கள் சாமிபடங்களை கோவில் நிர்வாகிகள் வழங்கினர். காலை 11.30 மணிக்கு கோவிலுக்கு வந்த அவர் பகல் 1 மணிக்கு கோவிலை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில் "தற்போது இந்திப்படம் ஒன்றில் நடித்து வருகிறேன். ஹரவுடி ராத்தோடு' என்ற அந்த இந்திபடத்தில் நான் தான் கதாநாயகன். வருகிற ஜுன் மாதம் 15-ந் தேதி படம் வெளியாகிறது. ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்" என்றார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் உங்களுக்கும் நயன்தாராவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு 'நோ கமெண்ட்ஸ். தற்போது அதைப்பற்றி பேசவிரும்பவில்லை' என கூறி விட்டு வேகமாக சென்றார்.

பின்னர் அவர் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருகே உள்ள முதியோர் ஆசிரமத்துக்கு சென்று அங்கிருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

கடந்த ஆண்டு இதே கோயிலில் நயன்தாராவும் பிரபு தேவாவும் ஜோடியாக வந்து இந்த பூஜையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
Read More | comments

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கத் தீர்மானம்

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரண ங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர் பில், நாளை நடைபெறவுள்ள கடற் றொழில் மாநாட்டில் மீனவப் பிரதிநிதி களுடன்கலந்துரையாடவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின் றது. எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு குடாபாடுவ பகுதியிலுள்ள மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நீர்கொழும்பு - கற்பிட்டியில் இருந்து மன்னார் வரை யான மீனவர்கள் கலந்துகொண்டனர். எரிபொருள் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, மீனவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை முடி வுக்கு கொண்டுவந்ததாக அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபி விருத்தி பிரதி அமைச்சர் சரத் குமார தெரிவித்தார். அமைச்சர் பசில் ராஜபக் ஸவின் ஆலோசனைக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன் னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப் பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். அத்துடன், இது தொடர்பான தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்க முடியுமென அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சரத் குமார மேலும் கூறினார்.

Read More | comments

மீண்டும் ஷம்பியனாகியது சென்னை ரைனோஸ்

இந்திய சினிமா நட்சத்திரங்கள் பங்கு கொள்ளும் சி.சி.எல் நட்சத்திர கிரிக் கெட் போட்டியில் தொடர்ச்சியாக இர ண் டாவது முறையாக தமிழ் சினிமா வை பிரதிநிதித்துவப்படுத்தும் சென் னை ரைனோஸ் ஷம்பியனாகி யுள்ள து. ஆறு அணிகள் பங்குபற்றியஇப்போ ட்டியின் இறுதிப் போட்டி சென்னை ரைனோஸ் - கர்னாடகா புல்டோசர்ஸ் அணிகளுக்கிடையில் ஹைதராபாத் ராஜவ் காந்தி சர்வதேச அரங்கில் நேற்றிரவு நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை ரைனோஸின் முதலாவது விக்கெட் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் வீழ்த்தப்பட்டது எனினும் தனித்து பேராடிய விக்ராந்த் ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலுச் சேர்த்தார். ஏனைய வீரர் கள் எவரும் பெரிதாக சோபிக்காத நிலையில் சென்னை ரைனோஸ் நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை ப் பெற்றுக்கொண்டது. கர்னாடகா புல்டோசர்ஸ் அணியின் பந்துவீச்சில்  காரத்திக், துர்வா, பிரதீப்,மற்றும் அபிமன்யூ ஆகியோர் தலா ஒரு விக்கெட் டினை வீழ்த்தினர். 162 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கர்னாடகா புல்டோசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு  விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று 1 ஓட்டத்தினால் தோல் வியை தழுவியது. கர்னாடகா அணியின் துடுப்பாட்டத்தில் துர்வா 58 ஓட்டங்களயும் கார்த்திக் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


சென்னை அணியின் பந்துவீச்சில் சிவா இரண்டு விக்ககெட்டுகளை வீழ் த்தினார். போட்டியின் நாயகனாக விக் ராந்த தெரிவானார். போட்டியை பொ றுத்தவரை கடந்த வருடம் இறுதிப் போட்டியில் சந்தித்த அதே அணி கள் இம்முறையும் களமிறங்கியமையும் கடந்த வருடம் ஷம்பியனாகிய சென் னை அணியே இமமுறையும் ஷம்பி யனாகியமையும் விசேட அம்சமாகும்.


Read More | comments

“உள்ளத்திலுள்ள பிளவுகளே பிரச்சனை களுக்குக் காரணம்” -மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை


அநேகமானவர்கள் விரக்தியுடன் செய ற்படுவதற்கு அவர்க ளின் அகத்திலுள் ள பிளவுகளே காரணம் என பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ் ஜித் ஆண்டகை தெரிவிக் கின்றார்.மொ றட்டுவ முகத்துவாரம் ஜீஸேவாஸ் தேவாலயத்தின் வெள்ளிவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, பேராயர் இதனைக் குறிப்பிட் டார். பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தலை மையில் திருப்பலிகள் ஒப்புக் கொடுக் கப்பட்டன.

அனைத்து விரக்திகளுக்கும்,மக்களின் உள்ளத்திலுள்ள பிளவுகளே அநே கமான சந்தர்ப்பங்களில் காரணமாக அமைவதாகவும், அந்தப் பிளவுகளின் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பேராயர் இதன்போது கூறினார்.
அனைவரும் நல்லதை செய்யவே விரும்புவதாகவும், எவ்வளவு நல்லதை செய்ய முயற்சித்தாலும் இறுதியில் தீயதை நோக்கியே ஈர்த்துச் செல்லப் படுவதாகவும் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை குறிப்பிட்டார். பிளவு களுக்கு மத்தியிலேயே தீய செயல்கள் அனைத்தும் இடம்பெறுவதாக குறிப் பிட்ட அவர் அதன் வினளவாக சுய கட்டுப்பாடு இல்லாது போவதாக சுட்டிக் காட்டினார். சட்ட விதிகளும் கட்டளைகளும் பிறப்பிக்கப்படுவதால் மாத்திரம் ஒழுக்கம் ஏற்படாது எனவும் ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் முத லில் தனி மனித ஒழுக்கம் ஏற்படவேண்டியது அவசியமெனவும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

Read More | comments

கிழக்கு மாகாணத்தில் விசேட கிராமிய அபிவிருத்தி- முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

Written By paadumeen on Saturday, December 31, 2011 | 9:09 AM

Saturday, December 31, 2011

பாதிக்கப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்தல் என்ற விசேட கிராமிய அபிவிருத் திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டிற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் இருந்து தலா இரண்டு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அங்குள்ள மக்களுக்கான வாழ்வாதார வசதிகள்இ தொழில் வாய்ப்புக்கள், கல்வி, போக்குவரத்து, சுகாதாரவசதிகள், மின்சாரம், மற்றும் குடிநீர் வசதிகள் என்பன செய்து கொடுக்கப்படவுள்ளன.

அத்துடன் விசேட வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் சுயதொழில்களுக்கு உதவிகள் கனடிப்படையில் வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விசேட கிராமிய அபிவிருத்திட்டத்தின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More | comments

அதிகம் பார்க்கப்பட்டவை

Categories

சர்வதேச செய்திகள்

international news