தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » முத்தரப்பு ஒருநாள் தொடர்! 110 ரன்களில் இந்தியா படுதோல்வி

முத்தரப்பு ஒருநாள் தொடர்! 110 ரன்களில் இந்தியா படுதோல்வி

Written By paadumeen on Monday, February 20, 2012 | 9:43 AM

முத்தரப்புத் தொடரின் 7-வது ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியாவிடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா. முதலில் துடுப்பெடுத் தாடிய ஆஸ்திரே லியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. பின்னர் துடுப் பெடுத் தாடிய இந்தியா 43.3 ஓவர்களில் 178 ரன்
களுக்கு ஆட்டமிழந்தது. 

ஆஸ்திரேலியாவின் பென் ஹில்பெனாஸ் 5 விக் கெட்டுகளையும், பிரெட் லீ 3 விக்கெட்டுகளை யும் வீழ்த்தி இந்திய அணியைச் சரிவுக்குள்ளா க்கினர்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டொஸ் வென்ற ஆஸ்திரேலிய கப்டன் பாண்டிங் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டேவிட் வார்னரும், மேத்யூ வேடும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தனர். 46 பந்துகளைச் சந்தித்த வார்னர் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து பதான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த பாண்டிங் 7 ரன்களில் ஜாகீர்கான் பந்துவீச்சில் தூக்கியடிக்க அது எல்லைக் கோட்டருகே பதானிடம் கேட்ச் ஆனது. 67 பந்துகளைச் சந்தித்த மேத்யூ வேட் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பீட்டர் ஃபோரஸ்டும், மைக் ஹசியும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். ஃபோரஸ்ட் நிதானமாக ஆடினாலும், மைக் ஹசி அதிரடியாகவே விளையாடினார்.

45 பந்துகளில் அரைசதம் கண்டார் மைக் ஹசி. அவர் 52 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபோரஸ்ட் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் ஜோடி சேர்ந்த டேவிட் ஹசி-டேனியல் கிறிஸ் டியன் ஜோடி இந்திய பெüலர்களை பதம்பார்த் தது.

வினய் குமாரின் ஓவரில் தொடர்ந்து 4 பவுண் டரிகளை விளாசினார் கிறிஸ்டி யா ன். இதனா ல் ஆஸ்திரேலியா 50 ஓவர்களி ல் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. ஹசி 26 ரன்களும், கிறிஸ்டியான் 18 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியத் தரப்பில் பதான் அதிக பட்சமாக 3விக்கெட் வீழ்த் தினார்.

289 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்தொடங்கிய இந்திய அணி தொடக்கத் திலேயே ஆட் டம் கண்டது. கம்பீர் 5, சச்சின் 3, ரோஹித் 0, கோலி 12 என அடுத் தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலைக் குத் தள்ளப்பட்டது இந்தியா.

பின்னர் தோனியும், ரெய்னாவும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் குவித்தனர். 41 பந்துகளைச் சந்தித்த ரெய்னா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னா-தோனி ஜோடி சேர்த்த 46 ரன்களே, இந்த ஆட்டத்தில் இந்திய இணை குவித்த அதிகபட்ச ஸ்கோர்.

பின்னர் வந்த ஜடேஜா 18 ரன்களில் ஆட்டமிழக்க, தோனியுடன் இணைந்தார் இர்ஃபான் பதான். இதனிடையே தோனி அரை சதமடித்தார். 84 பந்துகளைச் சந்தித்த அவர் 1சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 27பந்துகளைச் சந்தித்த இர்ஃபான் பதான் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டாக ஜாகீர்கான் 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் இன்னிங்ஸ் 43.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் பென் ஹில்பெனாஸ் 5 விக்கெட்டுகளையும், பிரெட் லீ 3 விக்கெட்டு களையும் வீழ்த்தினர். ஹில்பெனாஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவை 110 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் ஆஸ்தி ரேலியாவுக்கு போனஸ் புள்ளியோடு சேர்த்து மொத்தம் 5 புள்ளிகள் கிடைத்தன. இதன்மூலம் 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா. இந்தியா 10 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இலங்கை 7 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, ஆரம்பத்தில் நிதானமாக ஆடியதால் 40 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 187 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் ஹசி மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் கடைசி 10 ஓவரில் அந்த அணிக்கு 101 ரன்கள் கிடைத்தன. இதனால் வலுவான ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய பேட்டிங்கின்போது 29-வது ஓவரை வீசினார் ரெய்னா. இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் மைக் ஹசியை ஸ்டெம்பிட் செய்தார் தோனி. இதையடுத்து ஹசி அவுட்டா, இல்லையா? என்பதை அறிய மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார் கள நடுவர். டி.வி. ரீபிளேயில் பார்த்தபோது ஹசி அவுட் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து "நாட் அவுட்' பொத்தானை அழுத்துவதற்குப் பதிலாக "அவுட்' பொத்தானை மாற்றி அழுத்தியதால் டிஜிட்டல் பலகையில் "அவுட்' என்று அறிவிப்பு வெளியானது. இதை சற்றும் எதிர்பாராத ஹசி வேகமாக வெளியேறினார். அதற்குள் தவறு நிகழ்ந்திருப்பதை உணர்ந்த கள நடுவர் பில்லி பெüடன், ஓடி வந்து ஹசியை அழைத்து மீண்டும் விளையாட வைத்தார். அப்போது ஹசி 1 ரன்னில் இருந்தார். அதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 59 ரன்கள் குவித்ததோடு, ஆஸ்திரேலியாவைச் சரிவிலிருந்தும் மீட்டார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment