Home »
» கடுமையான பாதுகாப்பில் சிலாபம் நகர்!
கடுமையான பாதுகாப்பில் சிலாபம் நகர்!
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது படையினரின் துப்பாக் கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த அன்டனி பெனான் டோவின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில், சிலாபம் நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமை யாக முன்னெடு க்கப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவிக் கின்றனர். இந்தப் பாதுகாப் பு நடவடிக் கைகளில் சுமார் ஆயிரத் து 500 பொலி ஸாரை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக் களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக அவர் தெரி வித்துள்ளார். எவ்வித வன்முறைகளும் இன்றி அன்னாரது இறுதி கிரியைகளை நடத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment