தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » படையிலிருந்து விலகியவர்களுடன் துணைக்குழுக்கள் கூட்டு!! வர்த்தகர்களை மிரட்டி கப்பம்!!.

படையிலிருந்து விலகியவர்களுடன் துணைக்குழுக்கள் கூட்டு!! வர்த்தகர்களை மிரட்டி கப்பம்!!.

Written By paadumeen on Thursday, April 23, 2009 | 2:31 PM

இராணுவத்திலிருந்து தப்பிவந்தவர்களுடன் துணைக் குழுக்களும் இணைந்து கண்டிப் பிரதேசத்தில் உள்ள தமிழ் வர்த்தகர்களிடம் பெருந்தொகையான பணத்தை கப்பமாக அறவிட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. கடந்த ஒருவாரகாலமாக வர்த்தக நிலையங் களுக்கும், வர்தக உரிமையாளர்களது வீடுகளுக்கும் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு சுமார் ஒரு இலட்சம் முதல் 50 இலட்சம் வரை கப்பம் கேட்டுள்ள னர். அதிகமான வர்த்தகர்கள் பயத்தில் கப்பம் செலுத்தியுள்ளதாகவும் தெரி விக்கப்படுகின்றது. தொலைபேசியில் வங்கிக் கணக்கு வழங்கப்பட்டே வர்த்த கர்கள் மிரட்டப்படுவதால் அந்த வங்கி இலக்கங்களுக்கு பணத்தை வைப்பி லிட்டு வருகின்றனர்.
கப்பம் கொடுக்கமறுத்த பேராதனை விதியிலுள்ள வர்த்தகர் ஒருவரது வீட்டுக்கு கடந்த இரண்டநாட்களக்கு மன் கிரனைட்டும் எறிந்துள்ளார்கள். மற்றுமொரு வர்த்தகரின் வீட்டின் கதவினைத் தட்டி பிஸ்டல் ரவையைக் காட்டி இதைப் பிடித்துப் பாருங்கள் இந்த நிலைதான் உங்களுக்கும் என கூறியிருக்கிறார்கள். அவர்கள் தமிழைத் தெளிவாக கதைப்பதாகவும். கருணா குழுவினர் என்று தம்மை அறிமுகப்படுத்தவதாகவும் இவர்களுடன் கூட வரும் சிங்கள இளைஞர்கள் இராணுவத்திலிருப்பவர்களைப் போன்று இருப்ப தாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அச்சமடைந்த வர்த்தகர்கள் கருணாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அதற்கு கண்டியில் தமது அமைப்புக்கு எந்தவித தொடர்பும் இல்லையென்றும். கப்பம் வாங்குவதற்கு தமக்கு அவசியமில்லை யென்றும் கருணா மறுத்துள்ளார். கண்டிபொலிஸாரிடம் வர்த்தகர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தததையிட்டு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக் கையில் இராணுவத்திலிருந்து தப்பிவந்தவர் ஒருவர் கைதுசெய்யப் பட்டுள்ளார். இவரது பெயர் சனிபாபா என தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட வங்கி இலக்கங்களை ஆராய்ந்த பொழுது சம்பத் வங்கிக்குரிய அந்தக்கணக்கு கொழும்பிலுள்ள சிங்களப் பெண்ணுக்குரியது என்றும் மற்றை யது கொழும்பு கொமர்ஷல் வங்கியில் கணக்கு வைத்துள்ள முஸ்லிம் ஒருவருடையது என்றும் தெரியவந்துள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment