

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங் களை முழுமையாக மீட்டெடுத்ததை பெரும் விழாவாகக் கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றி விழா வை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன் விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும் கிண்ட லும் செய்கின்றனர். அத்துடன் சிறிலங்காவின் தேசிய கொ டியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்கவிட்டு வெற் றியைக் கொண்டாடவேண்டும் எனவும் எச்சரித்து விட்டு சென்றுள்ளனர்.
இதேவேளை யாழ்குடாவில் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினரும் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் துணைஇராணுவக் குழுவினரும் இந்த வெற்றி விழாவினை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன் கொண்டாட தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
0 comments:
Post a Comment