தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » களுவாஞ்சிக்குடி வர்த்தகர் கொலையில் வெளிவராத உண்மைகள்!!

களுவாஞ்சிக்குடி வர்த்தகர் கொலையில் வெளிவராத உண்மைகள்!!

Written By paadumeen on Monday, May 16, 2011 | 2:03 PM

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி எருவில் பாட சாலை வீதியில் கடந்த 13 ஆம்திகதி மாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குமார் என்ற ழைக்கப்படும் முருகேசு இளங்குமரன் (வயது 35) என்ற பிரபல வர்த்தகர் கொல்லப்பட்டிருந்தார்.
தற்பொழுது விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் இக்கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் சில
மக்குக் கிடைத்துள்ளன. இச்சம்ப வம் பற்றித் தெரியவருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணியளவில் இளங்குமரன் வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளொன்றில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் இவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்க மற்றவர் வீட்டு வாசலில் நின்ற தனது வாகனத்துக் குள்ளிருந்த இளங்குமரனை நோக்கித் துப்பாக்கிச்
சூட்டை நடாத்தியிருக்கிறார். T56 ரக துப்பாக் கியைப் பயன்படுத்தியே இவர்கள் இத்தாக்குதல்களை நடத்தியதாகத் தெரியவருகிறது.
சொந்தமாக மதுபானசாலையை நடத்திவந்த இளங்குமரனிடம் வேலைபார்த்து வந்த பதுளையைச் சேர்ந்த சந்திரன் என்பவரும் இளங்குமரனின் மைத்துனரமான நல்ரட்ணம் என்பவரும் இக்கொலை யில் சம்பந்தப்பட்டிருப்பதாக பலனாய்வுத் தகவலொன்று தெரிவிக்கிறது.
சந்திரன் என்பவர் முன்னர் இளங்குமரனிடம் வேலைசெய்து சுமார் 50 இலட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி சுதந்திரக்கட்சி எம்பியான லக்ஸ்மன் பெரேராவிடம் தற்பொழுது வேலை செய்து வருகிறார். மற்றையவர் நல்ரட்ணம். இவர் முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தில் இருந்தவர். ஈபிடிபியினருடனும் இவருக்குத் தொடர்புகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. இவர் முன்னர் இளங்குமரனுடைய தம்பியின் கொலையில் சம்பந்தப்பட்டவர். இளங்குமரனின் மைத்து னர். அத்துடன் இவர் முன்னர் ஐக்கியதேசியக் கட்சியில் வேட்பாளராக நின்ற ஜெயக்குமார் மீதான கொலைவழக்கில் 2வருடங்கள் சிறைக்குள்ளிருந்தவர்.
சந்திரனும், நல்ரட்ணமும் இணைந்து ஆரம்பத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்கள் இருவரை வைத்து இளங்குமரனை போட்டுத் தள்ளியிருக்கின்றனர். இளங்குமரனைச் சட்டவர்கள் யாரென்று அடையாளம் காணமுடியாவிட்டாலும் இவர்கள் முன்னர் கட்சியிலிருக்கும்போது களுவாஞ்சிக்குடிக்கு பொறுப்பாளர்களாக இருந்ததாக ரிஎம்விபியினரின் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி இக்கொலையை இவர்கள் இருவரும் சேர்ந்தே செய்திருக்கின்றனர்.
சுதந்திரக்கட்சி எம்பியான லக்ஸ்மன் பெரேராவும் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் புல னாய்வுத் தகவலொன்று தெரிவிக்கிறது. இளங்குமரன் சொந்தமாக பத்து மதுபானசாலைகளை நடத்தி வருகிறார். இதில் அவரக்குச் சொந்தமான மூன்று மதுபானசாலைகளை தான் எடுத்துச் நடாத் தப்போவதாக கேட்டிருக்கிறார். இவங்களுக்கிருந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளால் நாலாம் மாடி சிஐடி யினர் இளங்குமரனின் வீட்டுக்குச் சென்று வலுக்கட்டாயமாக மதுபானசாலைகள் மூன் றையும் எழுதியெடுத்திருக்கின்றனர். இக்கொலையை பொலிஸ் பிரிவைப் பயன்படுத்தி கிளியர் பண் ணுவதாகவும் கொலையாளிகளுக்கு எதுவித பாதிப்பும் வராமல் பார்த்தக் கொள்வதாகவும் பெரேரா கடந்த சிலநாட்களுக்கு முன் நல்ரட்ணத்திடம் வாக்குறுதியளித்திருக்கிறார். இதனால் நல்லரெட்ணம் ஆட்களை வைத்து பணம்கொடுத்து விஷயத்தை முடித்திருக்கிறார்.
இதற்கான காரணம் தொழில் பிரச்சனை மட்டுமல்ல இயக்கங்களுடன் இருந்த தொடர்புகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். நல்ரட்ணத்தினுடைய மனைவியின் தம்பி யே இளங்குமரன். தொழில்போட்டியும் செல்வாக்கால் ஏற்பட்ட பொறாமையும் இந்தக் கொலை யை செய்ய வைத்துள்ளன.
தற்பொழுது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்ரட்ணம் சிஐடி யினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். சுதந்திரக்கட்சி எம்பியான லக்ஸ்மன் பெரேராவினுடைய ஆட்களும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவ தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலிருந்து சென்ற விசேட புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அண்மைக்காலமாக மட் டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பாக ஆராய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கடந்த சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்த க்கது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment