யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடம் எட்டு லட்சம் ரூபா பணத்தைக் கடனாகப் பெற்று மோசடி செய்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்ட தென்பகுதி யைச் சேர்ந்த இருவர் தலா 10 ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் தலா 2லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கை யாழ் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா முன்னிலையில் விசார ணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது சந்தேக நபர்கள் இருவரது சார்பிலும் சட்டத்தரணி ஜொனி மதுரநாயகம் ஆஜரானார்.
நிட்டம்புவ மற்றும் ராஜகிரிய ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்குள்ள ஒருவரிடம் சகோதரர்களைப் போல் பழகியுள்ளனர். அவரும் இவர்களை முழுமையாக நம்பி எட்டு இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் மீளச் செலுத்தாது மோசடி செய்துள்ளதைத் தொடர்ந்து பணத்தைப் பறிகொடுத்தவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர்களைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அவர்களை பிணை அடிப்படையில் விடுவித்த நீதவான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ் நீதிமன்றில் கையெழுத்திடவேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment