
செவனகல வைத்தியசாலை பொறுப்பதி காரியின் உத்தியோகபூர்வ விடுதியிலுள்ள நீர்த்தாங்கியில் விஷம் கலந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வைத் தியசாலையில் சேவையாற்றும் சக வைத் தியர் ஒருவரின் வழிகாட்டலில் இந்த ஊழி யர் நீர்த் தாங்கியில் விஷம் கலந்துள்ள தாக செவனகல வைத்தியசாலையின் பொ றுப்பதிகாரி டொக்டர் சமிந்த விதானகே குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக மொனராகலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாள ருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறி னார். எவ்வாறாயினும் குற்றஞ் சாட்டப் பட்டுள்ள வைத்தியரிடம் இது பற்றிக் கேட்டபோது இந்த விடயம் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அவர் தெரிவித்தார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக செவனகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் திணைக்கள மட்டத்திலான விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக மொனராகலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பீ.டி.கே. அதிகாரி கூறினார்.
0 comments:
Post a Comment