தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » சேவைப் பகிஸ்கரிப்பு வெற்றி! நாளைமுதல் தொழிற்சங்கப் போராட்டம்!

சேவைப் பகிஸ்கரிப்பு வெற்றி! நாளைமுதல் தொழிற்சங்கப் போராட்டம்!

Written By paadumeen on Monday, February 13, 2012 | 12:00 PM

எரிபொருள் விலை அதிகரிக்கப் பட்ட மைக்கு எதிராக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆரம்பித்த சேவை பகிஸ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தமது கோரிக்கை தொடர்பில் இதுவரையில் உரிய அதிகாரிகள் தீர்வை முன்வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதுவரை எந்தவொரு பதிலும் வழங்காமையால் தமது சங்கம் நாளைமுதல் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கப் போவதாக சற்றுமுன்னர் அவர் தெரிவித்துள்ளார்.
டீசலுக்கு 39 ரூபா மானியம் வழங்க வேண்டும், அல்லது அது வழங்கப்படும் வரையில், 17.1 சதவீத பேருந்து பயணக் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று சேவைப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தனியார் பேருந்துகளின் சேவைப் பகிஸ்கரிப்பால், நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment