தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » வரதட்சணை கொடுக்க முடியாவிட்டால் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் கைது!

வரதட்சணை கொடுக்க முடியாவிட்டால் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் கைது!

Written By paadumeen on Tuesday, February 14, 2012 | 9:22 AM


ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கொடுக்க முடியா விட்டால் தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக் க வேண்டும் என்று மனைவியை கொடுமைப் படுத் திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
புனேவை சேர்ந்தவர் இம்ரான் ஷாயிக்(35) என்ஜினி யரான இவருக்கும் மும்பையை அடுத்துள்ள கல் யாண் என்ற இடத்தை சேர்ந்த சாயிரா பானு (பெயர் மாற்றம்)வுக்கும் இடையே கடந்த இரு வருடங்களு க்கு முன்னர் திருமணம் ஆனது.இவர்களுக்கு ஒன்ற ரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. 
திருமணத்திற்கு முன்னரே இம்ரானுக்கு குடி பழக் கம் உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்கள் இருப்பது ஷாயிரா பானுவுக்கு தெரியவந்தது.

இதனால் அவர் இம்ரானை திருமணம் செய்துகொள்ள மறுத்தார். ஆனால் ஷாயிரா பானுவை திருமணம் செய்தே தீருவது என்ற கங்கணம் கட்டிக் கொண்ட இம்ரான்இஷாயிரா பானுவின் மனதில் இடம்பிடிப்பதற்காக மூன்று நாள் உணவு உட்கொள்ளாமலும் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை கை விட்டும் உணாவிரதம் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். அவரது இந்த உண்ணாவிரதத்தால் மனம் மாறிய ஷாயிரா பானு இம்ரானை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். 

இதனையடுத்து இருவருக்கும் திருமணம் ஆனது.ஆனால் திருமணம் ஆன பதினைந்தே தினங்களில் தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கிய இம்ரான் மீண்டும் மது அருந்துவதும் சிகரெட் பிடிப்பதும் வீட்டிற்கே பிற பெண்களை அழைத்து வந்து மனைவி கண் எதிரிலேயே உல்லாசமாக இருப்பது நண்பர் களை வீட்டிற்கு அழைத்து வந்து மது விருந்து நடத்துவதும் அவர்களுக்கு மனைவியை அழைத்து சைட் டிஷ்களை பரிமாற சொல்வதுமாக இருந்துள் ளார்.

ஷாயிரா பானு இதை எதிர்த்து கேட்டபோது இம்ரான் அவரை அடித்து துன்புறுத்தி தம்மை திருமணம் செய்துகொள்ள முதலில் மறுத்ததற்கு பழிவாங்கவே தாம் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி திருமணம் செய்துகொண்டதாகவும் கூறி கொடுமைப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் அண்மையில் தமக்கு கார் வாங்கவேண்டும் என்றும் இதற்காக 5 லட்சம் ரூபாயை வரதட்சணையாக உனது பெற்றோரிடமிருந்து வாங்கி வா என்றும் ஷாயிரா பானுவை அடித்து துன்புறுத்தியுள்ளார் இம்ரான். ஆனால் தம்மால் வரதட்சணை வாங்கி வர முடியாது என ஷாயிரா பானு மறுத்தபோது அப்படியானால் அதற்கு பதிலாக எனது நண்பர்களுடன் உல்லாசமாக இரு என்று அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஷாயிரா பானு நிலைமை பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு போனதும் இது குறித்து கல்யாண் போலீசில் புகார் செய்தார். 

இதனைத் தொடர்ந்து இம்ரானை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது பெற்றோர் சகோதரிகள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment