தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Written By paadumeen on Monday, February 13, 2012 | 6:08 PM

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சிவன் கோயி லுக்கு பின்னால் தூக்கில் தொங்கிய நிலையில்55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இன்று காலை(13.02.2012)சடலத்தை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தில் அடிகாயங்கள் காணப் படுவதால் சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப் பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிக்குடி மரண விசாரணை அதிகாரி சடலத்தின் மீதான மரண விசாரணையை மேற்கொண்டதாகவும் இச்சம்ப வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment