தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » நீர்கொழும்பில் ஒருவர் குத்திக் கொலை

நீர்கொழும்பில் ஒருவர் குத்திக் கொலை

Written By paadumeen on Thursday, February 16, 2012 | 2:24 PM

நீர்கொழும்பு நகர மத்தியின் பிரதான வீதியி ல் உள்ள குதிரைப் பந்தய முகவர் நிலையம் ஒன்றில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியள வில் இந்த சம்பவம் இடம்பெற்றது.  நீர்கொழும்பைச் சேர்ந்த பேர்னாட் (வயது 55) என்பவரே கத்தியால் குத்திக் கொலை செய் யப்பட்டவர் ஆவார்.

குதிரைப் பந்தயம் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கு இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது கைகலப்பாக மாறிய நிலையில் ஒரு நண்பர் தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் நீர் கொழும்பு பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

(கே.என்.முனாஷா)

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment