வெலிமடை விபத்தில் ஒருவர் பலி
Written By paadumeen on Tuesday, February 14, 2012 | 6:57 PM
லொறியொன்றில் மரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டி ருந்த போது மரக்குற்றி ஒன்று வீழ்ந்து அவர் உயிரி ழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பகுதியை சேர்ந்த இரண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை பண்டாரவளை ஹப்புதளை வீதியின் கொலதென்ன பகுதியில் லொறியொன்று வீதியை விட்டுவிலகி வீடொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதியும் உதவியாளரும் பண்டாரவளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் போது வீட்டில் எவருக் கும் காயமேற்படவில்லை. அத்தோடு கொழும்பு டொரின்டன் அவன்யூவிற்கு அருகில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று அதிகாலை இந்த சடலத்தை மீட்ட தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். உயிரிழந்த நபர் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment