தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » நீர்வேலியில் திருடுபோகும் பழைய இரும்பு, பித்தளைப் பொருட்கள்!

நீர்வேலியில் திருடுபோகும் பழைய இரும்பு, பித்தளைப் பொருட்கள்!

Written By paadumeen on Tuesday, February 14, 2012 | 12:05 PM


பழைய இரும்பு மற்றும் பித்தளைப் பொருட்களைக் களவாடும் திருடர் களின் தொல்லை நீர்வேலிப் பகுதி யில் அதிகரித்துவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பொது இடங்கள் மற்றும் குடிமனைப் பகுதி களில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தினமும் இடம்பெற்று வருகின்றன. என்று மக்கள் குறைப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லான்மாஸ்டர் ஒன்றில் பழைய இரும்புகளை எற்றி வந்த கும்பல் ஒன்று இப்பகுதியில் உள்ள வீட்டு முற்றத்தில் இருந்த பெரிய பித்தளைக் கிடாரமொன்றை களவாடுவதற்கு எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
‘ஆள் நடமாட்டத்தைக் கண்டு சந்தேகப்பட்டு “என்ன வேணும்” எனக் கேட்ட தும் திருடர்கள் லான் மாஸ்டருடன் தப்பி ஓடிவிட்டார்கள்” என்று வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும் அப்பிரதேசத்திலுள்ள ஆலயயமொன்றிலும் கடந்த வாரம் திருடர்கள் கைவரிசையைக் காட்டிச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த பித்தளையிலான தெய்வ விக்கிரகங்கள் இரண்டை உடைத்து எடுத்துச் சென்றிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது இப்பிரதேசத்திலுள்ள பிரபலமான கராஜ் ஒன்றினுள் உட்புகுந்த திருடர்கள் இங்கிருந்த இரும்புப் பொருட்களையும் அள்ளிச்சென் றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றத. இச்சம்பவம் தொடர்பாக நீர்வேலி பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையென பிரதேசவாசிக ள் விசனம் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment