10 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - சந்தேக நபர் கைது
Written By paadumeen on Wednesday, February 15, 2012 | 10:40 AM
யாழ்ப்பாணம் அராலி, வசந்தபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி, அருகிலுள்ள வீட்டிற்கு இரவு வேளையில் நெருப்புப்பெட்டி வாங்குவதற்காகச் இச்சிறுமி சென்ற போதே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத் தப்பட்டுள்ளார். சந்தேக நபர் சிறுமி யின் வாயில் துணியைத் திணித்து விட்டு பாலியல் வல்லுறவு மேற் கொண்டதாகவும், மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியும் சந்தேக நபரும் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபரை இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment